'வடசென்னை வெற்றிமாறன் கட்' வெளியிட வேண்டும் என தனுஷ் மற்றும் வெற்றிமாறனிடம் கோரிக்கை வைத்துள்ளார் இயக்குனர் ரத்னகுமார்.
மேயாத மான் , ஆடை உள்ளிட்ட கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் ரத்னகுமார்.சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படத்தில் வசனகர்த்தாவாகவும் இவர் பணியாற்றியுள்ளார்.இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் வெற்றிமாறனிடம் , ரத்னகுமார் வைத்துள்ள கோரிக்கை வலைத்தளங்களில் வரலாகி வருகிறது.அதுமட்டுமல்லாமால் ரத்னகுமாரின் கோரிக்கைக்கு
வெற்றிமாறன் செவிசாய்க்க வேண்டும் என்றும் ரசிகர்கர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தனுஷ் , வெற்றிமாறன் கூட்டணியில் 2018 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் 'வடசென்னை'.இந்த திரைப்படம் வெளியாகும் போதே, மூன்று பாகங்களாக வடசென்னை திரைப்படம் வெளியாகும் என அறிவித்திருந்தார் வெற்றிமாறன். ஆனால், முதல் பாகம் வெளியான போதே ஏகப்பட்ட விமர்சனங்களும் சர்ச்சைகளும் கிளம்பின. இதனால் வடசென்னை 2 திரைப்படத்தின் திட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு , தனுஷ் நடிப்பில் 'அசுரன்' திரைப்படம் இயக்கி வெற்றி கண்டார்.இதான் பிறகாவது வடசென்னை 2 தொடங்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர் . ஆனால் தற்போது வெற்றிமாறன் , சூரி - விஜய்சேதுபதி படம் மற்றும் சூர்யாவின் 'வாடி வாசல்' திரைப்பட பணியில் பிசியாக உள்ளார்.
இந்நிலையில் வடசென்னை வெற்றிமாறன் கட் என்ற பெயரில் அன்பு, பத்மா, ராஜன், சந்திரா, குணா, செந்தில், தம்பி மற்றும் வேலு ஆகிய முக்கியமான கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக காட்சிகளை வைத்து 'வடசென்னை வெற்றிமாறன் கட்' வெளியிட வேண்டும் என தனுஷ் மற்றும் வெற்றிமாறனிடம் கோரிக்கை வைத்துள்ளார் ரத்னகுமார். சமீபத்தில் தான் பார்த்தா 'ஜஸ்டிஸ் லீக் ஸ்னைடர் கட்' திரைப்படத்தின் விளைவாகவே தனக்குள் இந்த யோசனை தோன்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார் ரத்னகுமார்.
Post a Comment