Like Us On Facebook

Responsive Advertisement
Responsive Advertisement
 பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பின் வீட்டிற்குள் புகுந்து ஜாலியாக குளித்துவிட்டு, மதுபானம் அருந்திய நபரை போலீசார் கைதுல் கொண்டு பெங்களூரு நகருக்குள் செல்ல புதிய கட்டுப்பாடு அமலாக உள்ளது.



பைரட்ஸ் ஆப் தி கரிபியன் படம் புகழ் நடிகர் ஜானி டெப் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் ஹாலிவுட் ஹில்ஸ் பகுதியில் வசித்து வருகிறார். யாரோ ஒருவர் ஜானி டெப் வீட்டிற்குள் இருக்கும் நீச்சல் குளத்திற்கு அருகில் நடந்து கொண்டிருப்பதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த நபர் ஜானி டெப் வீட்டிற்குள் புகுந்து அங்கிருக்கும் பாரில் மது அருந்திவிட்டு பின்னர் குளியல் அறையில் குளித்திருக்கிறார். பக்கத்து வீட்டுக்காரர் அளித்த புகாரின்பேரில் போலீசார் ஜானி டெப் வீட்டிற்கு விரைந்து வந்தனர். ஆனால் அந்த நபர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்துவிட்டார்.

இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர். ஜானி டெப் வீட்டிற்குள் யாரோ ஒருவர் புகுந்தது இது முதல் முறை அல்ல. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ஜானி டெப் வீட்டிற்குள் புகுந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஜானி டெப் இதுவரை பேசவில்லை. ஆனால் 3 மாதங்களில் இரண்டு முறை அவர் வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்திருக்கிறார்கள். ஜானியின் வீட்டில் இருந்த அலாரம் ஆஃப் ஆகிவிட்டதாம். அதனால் அந்த பெண் ஜானியின் வீட்டிற்குள் புகுந்திருக்கிறார். அவரை பிடிக்க முயன்றபோது தப்பியோடிவிட்டாராம்.

இந்த செய்தியை பார்த்தவர்களோ, ஜானி டெப் வீட்டிற்குள் புகுவது அவ்வளவு எளிதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். கெரியரை பொறுத்த வரை ஜானி டெப் நடித்த சிட்டி ஆஃப் லைஸ் படம் அண்மையில் தான் தியேட்டர்களில் வெளியானது.

தன் முன்னாள் மனைவியான நடிகை ஆம்பர் ஹெர்ட் தொடுத்த வழக்கின் தீர்ப்பு தனக்கு சாதமாக வராத பிறகு ஜானி டெப் சமூக வலைதளத்தில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் அவர் சிட்டி ஆஃப் லைஸ் படத்தை விளம்பரம் செய்ய மீண்டும் சமூக வலைதளம் பக்கம் வந்திருக்கிறார்.

Post a Comment

Previous Post Next Post