Like Us On Facebook

Responsive Advertisement
Responsive Advertisement
 தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,279 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,81,752 ஆக அதிகரித்துள்ளது. இது நீங்கலாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் மொத்தம் 37 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 20 பேருக்கும் உருமாறிய வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் தற்போது 13,983 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 815 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 247148 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 237375 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4232 பேர் உயிரிழந்துள்ளனர்

.


கோவையில் இன்று 211 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58471 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 56490 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 691 பேர் பலியாகியுள்ளனர்.

செங்கல்பட்டில் இன்று 202 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55796 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 53568 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 813 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 80,253 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,91,05,807 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,352 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 8,55,085 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 8,55,085 ஆக உயர்ந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post