Like Us On Facebook

Responsive Advertisement
Responsive Advertisement

 மதுரை பழங்காநத்தம் சரவணாஸ்டோர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து, இரண்டு பேருக்கு எலும்பு முறிவு உட்பட 8 பேர் காயம்.


மதுரை பைக்காரா பழங்காநத்தம் அருகே உள்ள சரவணா ஸ்டோர்சை ஒட்டியுள்ள சாலையில் அரசு பேருந்து தலைக்குப்பர கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அரசு பேருந்தில் பயணித்த 8 பேர் காயமடைந்தனர்.

இரண்டு பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் மற்றும் சுப்ரமணியபுரம் காவல் ஆய்வாளர் லிங்க பாண்டி, திலகர் திடல் சட்டம்-ஒழுங்கு உதவி ஆணையாளர் ரமேஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர். ஒரு மணி நேரம் போராடி பேருந்தை அப்புறப்படுத்தினர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து டிப்போவுக்கு சொந்தமான TN58 N-1888 என்ற பேருந்து திருமங்கலத்திலிருந்து ஆரப்பாளையம் செல்வதற்காக இரவு 11 மணியளவில் திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது. ஓட்டுநர் ஜனகர்(50) பேருந்தை இயக்கியுள்ளார்.

பேருந்து திருப்பரங்குன்றம் பாலம் அருகே வரும்போது வாகனம் நிலை தடுமாறி எதிர்பாராதவிதமாக ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.


இந்த விபத்து காரணமாகப் பேருந்திலிருந்த பயணிகள் மற்றும் பேருந்தை இயக்கிய ஓட்டுநர், நடத்துநர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். இதில் 2 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குறிப்பிட்ட அரசு பேருந்து முறையாகப் பழுது நீக்கப்படாமல் இயக்கியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதே போல் மூன்று நாட்களுக்குமுன் திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் அரசு பேருந்து TN58 N-1510 என்ற பேருந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post