Like Us On Facebook

Responsive Advertisement
Responsive Advertisement

 விஜய் சேதுபதி ஓய்வே இல்லாமல் ஓடியோடி நடித்துக் கொண்டிருப்பதற்கு காரணம் ரஜினிகாந்தின் அறிவுரை தான் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. பேட்ட படத்தில் நடித்தபோது ரஜினி அறிவுரை வழங்கினாராம்.




சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோவானவர் விஜய் சேதுபதி. தற்போது கோலிவுட்டின் பிசியான நடிகர் யார் என்று யாரை கேட்டாலும் விஜய் சேதுபதியின் பெயரை தான் சொல்வார்கள். அந்த அளவுக்கு மனிதர் ஓய்வெடுக்கக்கூட நேரம் இல்லாமல் கை நிறைய படங்கள் வைத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழிலேயே அவர் கையில் ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது. இதில் தெலுங்கு, இந்தி என்று பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். நான் முன்னணி ஹீரோவாக்கும். நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றெல்லாம் அடம்பிடிக்காத மனிதர் விஜய் சேதுபதி.

முன்னணி ஹீரோ ஒருவருக்கு வில்லனாக நடிக்கச் சொன்னாலும் இந்தா வாரேன் என்று சந்தோஷமாக நடித்துக் கொடுக்கிறார். சார், கொஞ்சம் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா என்று கேட்டாலும் ஓகே சொல்கிறார்.

ஹீரோயினுக்கு அப்பாவாகவே நடித்துவிட்டார் விஜய் சேதுபதி. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்து வரும் படத்தில் அவருக்கு விஜய் சேதுபதி தான் அப்பா என்று கூறப்படுகிறது. அடுத்து யாராவது தாத்தாவாக நடிக்கச் சொன்னாலும் நடிப்பார் போன்று.

விஜய் சேதுபதி புதுப் படங்களில் கமிட்டாகி வரும் வேகத்தை பார்த்து பலரும் மிரண்டு போயிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் ரஜினியாம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.


அந்த படத்தில் நடித்தபோது தான் ரஜினி அறிவுரை வழங்கினாராம். அதாவது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே முடிந்த அளவுக்கு அதிக படங்களில் நடித்து நன்றாக சம்பாதித்து சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள் என்று ரஜினி கூறினாராம். அதன் பிறகே விஜய் சேதுபதி தீயாக வேலை செய்கிறாராம்.

எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள லாபம் படம் அடுத்த மாதம் ரிலீஸாகவிருக்கிறது. பட ரிலீஸை பார்க்க ஜனநாதன் உயிருடன் இல்லை. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





Post a Comment

Previous Post Next Post