Like Us On Facebook

Responsive Advertisement
Responsive Advertisement
ரேசன் அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.



தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கைகளும் கவனம் பெற்று வருகின்றன. அதிலும் திமுகவின் தேர்தல் அறிக்கை மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

நீட் தேர்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி, விவசாயக் கடன் தள்ளுபடி என பல திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் தமிழக அரசோ 1000 ரூபாய் மட்டும் நிவாரணமாக வழங்கியது.

இந்நிலையில் கொரோனா நிவாரண நிதியாக மீதமுள்ள 4000 ரூபாயை திமுக ஆட்சி அமைந்ததும் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நேற்று கோவையில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் 4000 ரூபாய் எப்போது வழங்கப்படும் என்பது குறித்துப் பேசினார்.

மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. ஜுன் 3ஆம் தேதி கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் 4000 ரூபாய் வழங்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Post a Comment

Previous Post Next Post